டி-20 ஓய்வுக்கு இதுவே காரணம்: ரோஹித் சர்மா

புதுடில்லி: சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், ஓய்வு பெற்றதுக்கு காரணம், இளைஞர்களுக்கு, வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தான் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கூறினார்.

டி-20 உலக சாம்பியன் கிரிக்கெட் போட்டி, பார்படாஸில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்திய- தென்னாப்ரிக்காவுக்கு இடையேயான பைனலில், இந்திய அணி வெற்றி பெற்று சாம்பின் ஆனது.

இந்நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி இருவரும் டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.


இது குறித்து ரோஹித் சர்மா தெரிவித்துள்ளதாவது:

"நான் டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஒரே காரணம், 17 ஆண்டுகள் விளையாடி உள்ளேன்.

2024 டி-20 கிரிக்கெட் சாம்பியன் கோப்பை வென்றாகி விட்டது. நிறைய டி-20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடி விட்டோம்.

இதில் இருந்து நகர்வதற்கு இதுவே சரியான தருணம்,
இந்தியாவுக்காக, சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement