மோடியை தோற்கடிக்காமல் போகமாட்டேன்... மேடையில் மயங்கி விழுந்த கார்கே சபதம்

23


ஜம்மு: பிரதமர் மோடியை தோற்கடிக்கும் வரையில் சாக மாட்டேன் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சபதம் போட்டுள்ளார்.


ஜம்மு காஷ்மீர் தேர்தலின் 3வது மற்றும் இறுதி கட்ட தேர்தலையொட்டி கதுவா மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தலைமை கான்ஸ்டபிளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வின் போது, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.


அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு கார்கே உடல்நலம் தேறினார்.


பின்னர், மேடையில் கார்கே பேசியதாவது: நாங்கள் கண்டிப்பாக மாநில அந்தஸ்து வழங்குவோம், அதற்காக போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை சாக மாட்டேன். உங்களுக்காகத் தான் போராடுகிறேன்," எனக் கூறினார்.


மேலும், மத்திய பா.ஜ., அரசு ஜம்மு காஷ்மீரை ரிமோட் மூலம் இயக்குவதாகவும், தற்போதைய சூழலுக்கு இங்குள்ள மக்கள் தேர்தல் வேண்டாம் என்று கூறுவதாகக் கூறிய கார்கே, சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டின் மூலம் தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவே அவர்கள் விரும்புவதாகக் கூறினார்.

Advertisement