சென்னைக்கு அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வழுப்பெற்றுள்ளது. இது வரும் 17 ம் தேதி அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கிறது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை 5:30 மணியளவில், தென் மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 490 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, வரும் 17ம் தேதி காலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும்.கரையை கடக்கும் போது, தரைக்காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement