இடையூறு இல்லாத வகையில் கார் நிறுத்தலாம்!
சென்னை: போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி பாலத்தில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டியில், பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர்கள், எம்.பி.,க்களுடன் நிவாரணப்பணிகள் மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.
சீரான மின்சாரம் வழங்கப்படும்.
தண்ணீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் வைத்து அகற்றப்பட்டு வருகின்றன.
ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாதபடி காரை நிறுத்திக்கொள்ளலாம்.
மழைக்காலங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்படக்கூடாது என்பதை கவனித்து பணிகள் நடைபெறுகிறது.
பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி கூறினார்.