கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகில் கூழாங்கற்கள் கடத்திய லாரியை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியில் கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது கூழாங்கற்களை கடத்தி வந்த டிரைவர் ஒருவர், அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் திருநாவலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விராத் கோஹ்லி காயம்: பைனலில் விளையாடுவாரா?
-
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்: ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
-
அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
ஆசிய கபடி: இந்திய பெண்கள் சாம்பியன்
-
சவால்களை விட வாய்ப்புகளால் நிறைந்தது உலகம்: ஜெய்சங்கர்
Advertisement
Advertisement