வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் புகார்
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் டி.எஸ்.பி., அலுவலகத்தில், கோட்ட-மேட்டுப்பட்டியில் உள்ள, டிப்பர் லாரி, பொக்லைன் உரிமை-யாளர் சங்கத்தலைவர் சரவணபூபதி உள்ளிட்டோர் நேற்று அளித்த புகார் மனு:
சின்னதிருப்பதி, குண்டுக்கல் பகுதிகளில் இருந்து, உரிய அனுமதி பெற்று, எம்.சாண்ட், ஜல்லி, கிராவல் எடுத்து வருகிறோம். ஆனால் வழியில் உள்ள ஏனாதி, செம்மாண்டப்பட்டி ஆகிய பகு-திகளில், 25 முதல், 35 வயது வரை உள்ள பலர், லாரியை வழிம-றித்து, 2,000 முதல், 10,000 ரூபாய் வரை மிரட்டி பணம் பறிக்-கின்றனர். இல்லையெனில் லாரி அடியில், இருசக்கர வாகனங்களை போட்டு விபத்து ஏற்படுத்தியதாக பொய் புகார் தெரிவிக்கின்-றனர். பணம் கொடுத்தால் மட்டும் லாரியை விடுகின்றனர். ஆண்டு முழுதும் இப்பிரச்னை தொடர்கிறது. இதற்கு உரிய நட-வடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement