அ.தி.மு.க., கூட்டம்

வாடிப்பட்டி; பரவையில் நகர் அ.தி.மு.க.,சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

நகரச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், முன்னாள் துணை மேயர் திரவியம், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் கலாமீனா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, பாசறை செயலாளர் பரமசிவம், தலைமைக் கழக பேச்சாளர் முருகேசன் பேசினர். பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன், நிர்வாகிகள் சவுந்தரபாண்டி, நாகமலை, ஜெயராஜ், உட்பட பலர் பேசினர்.

Advertisement