குடிநீர் திறக்க எதிர்க்கட்சி தலைவர் மனு
புதுச்சேரி; ரமலான் நோன்பு துவக்கத்தையொட்டி, காலை 4:00 மணிக்கு தண்ணீர் திறக்ககோரி, எதிர்கட்சித் தலைவர் சிவா, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு செயற்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தினமும் காலை 5:00 மணிக்கு மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது, இஸ்லாமிய மக்களின் ரமலான் நோன்பு வரும் 1ம் தேதி துவங்க இருப்பதால், நோன்பு திறக்க அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து தங்களுடைய பணிகளை துவங்க வேண்டியுள்ளது. ஆகையால், வரும் 1ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மட்டும் தங்கள் துறையின் மூலம் தண்ணீர் திறக்கும் நேரத்தை அதிகாலை 4:00 மணிக்கு மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது
Advertisement
Advertisement