பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்,; சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நேற்று நடந்தது.

நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement