அங்காளம்மன் கோவில் மயானகொள்ளை உற்சவம்

நெட்டப்பாக்கம்; நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று இரவு 9 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் 1.00 மணிக்கு மயானக் கொள்ளை விழா நடக்கிறது.

Advertisement