கைப்பந்து போட்டி; சேலியமேடு பள்ளி 2ம் இடம்

பாகூர்; மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், சேலியமேடு வாணிதாசனார் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி அரசு மேல்நிலை பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான, மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கடந்த வாரம் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 26 குழுவினர் பங்கேற்று விளையாடினர். இதில், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, இரண்டாம் இடம் பிடித்தனர்.
மேலும், இப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசினை, வாணிதாசனார் பள்ளி மாணவர் வேணுபிரசாத் பெற்றார்.
சிறப்பாக விளையாடி சாதித்து வந்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது
Advertisement
Advertisement