தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு எம்.எல்.ஏ., நிவாரணம்

மரக்காணம்; தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.

மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு,63; இவரது கூரை வீடு கடந்த 21ம் தேதி மின் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.

சேதமடைந்த வீட்டை அர்ஜூனன் எம்.எல்.ஏ., நேற்று பார்வையிட்டு ராமு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, துணி மற்றும் ரூபாய் 5 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசு மூலம் இலவச வீடு வழங்க பரிந்துரை செய்வதாக கூறினார். முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகுமார், கிளை செயலாளர்கள் வரதராஜ், கோசலைராமன் உடனிருந்தனர்.

Advertisement