பாரா வீரர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை:தேசிய அளவில் நடந்த, பாரா தடகள மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில், பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு, உயரிய ஊக்கத்தொகையாக 2.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று நடந்த விழாவில், தேசிய அளவில், கோவா மற்றும் சென்னையில் நடந்து முடிந்த, 22, 23வது பாரா தடகளப் போட்டி...
மத்தியப்பிரதேசத்தில் நடந்த போக்சியா தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வென்ற 44 பாரா வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக, 2.52 கோடி ரூபாயை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
அவர் பேசுகையில், ''தமிழக முதல்வர் துவங்கி வைத்த, தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை சார்பில், 41 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்று, 113 பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில், 153 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை