செபி அமைப்பின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

துடில்லி: மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே இந்தியப் பங்குப் பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வெளியான அறிவிப்பில் இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார்.
கடந்த 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே, முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.
தற்போது நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
மேலும்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி