வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு
சென்னை, 'வாகன சோதனையில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்' என, போக்குவரத்து போலீசாருக்கு, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், தினசரி தங்கள் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதோடு, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் மட்டுமே, போக்குவரத்து போலீசார் ஆர்வம்காட்டி வருவதாகவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, 'வாகன தணிக்கையில் இனிமேல், ஒரு உதவி ஆய்வாளர், அவருடன் ஒரு காவலரும் மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை