தமிழாசிரியர் சிக்கினார்

அரியலுார்: அரியலுார் மாவட்டம், கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 57. விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்த இவர், அப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மாணவியின் பெற்றோர் புகாரின்படி, ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சுரேஷை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement