தடுப்பில்லாத சாலையோர பள்ளத்தால் அக்கமாபுரத்தில் விபத்து அபாயம்

அக்கமாபுரம்,:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, ஏரிக்கரை வழியாக, எடையார்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், 2.5 கி.மீ., ஒன்றிய சாலை உள்ளது.
முதல்வரின் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், 2022-- 23ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்டு உள்ளது. இந்த பிரதான சாலை ஓரம் திறந்தவெளி குளம் உள்ளது.
இந்த குளத்திற்கு போதிய தடுப்பு இல்லை. மேலும், சாலை ஓர குளக்கரையின் ஓரம் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் காணப்படுகிறது.
அந்த சாலை வழியாக பயணம் செய்வோரின் கண்களை பதம் பார்க்கும் அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது, ஒரு வாகனத்திற்கு மற்றொரு வாகனம் வழி விட்டு ஒதுங்கும் போது, சாலை ஓர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, அக்கமாபுரம்-- எடையார்பாக்கம் சாலை ஓரம் இருக்கும் குளத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி
-
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை