தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

இடையகோட்டை:திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே வலையபட்டியிலுள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வலையபட்டியில் ராயர் குலவம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா 4 நாட்கள் கொண்டாடப்படும்.

இரண்டாம் நாளான நேற்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து வேண்டிய வரம் கேட்பவர்களுக்கும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.

Advertisement