பராமரிப்பு இல்லாத ஊருணி கால்வாய்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், மேலப்பூடி ஊராட்சிக்கு உட்பட்டது சொரக்காய்பேட்டை. சொரக்காய்பேட்டை கிராமத்தை ஒட்டி கொசஸ்தலை ஆறு பாய்வதால், நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக உள்ளது. 10 அடி ஆழத்தில் நீர்மட்டம் நிலவுகிறது.
நீர்வளம் மிக்க இந்த கிராமத்தின் கிழக்கில், நலம்புரியம்மன் கோவில் எதிரே, மூன்று பக்கம் கரைகளை கொண்டு ஊருணி தண்ணீர் செல்லும் கால்வாய் பாய்கிறது. அருகில் பாயும் கொசஸ்தலை ஆறு வற்றினாலும், இந்த ஊருணி கால்வாயில் தண்ணீர் வற்றுவது இல்லை. தரைமட்டத்தில் இருந்து ஊற்றெடுத்து பாய்கிறது.
செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பு இல்லாத நீர்நிலை நாளுக்குநாள் துார்ந்து வருகிறது. நீர்நிலையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் குறிப்பேடு இனி தமிழில் மட்டுமே! தினமலர் செய்தி எதிரொலி
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
Advertisement
Advertisement