மயானக் கொள்ளையில் 1 லட்சம் பக்தர்கள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், மற்றும் சண்முகசெட்டி தெரு பூங்காவனத்தம்மன் கோவில் என, மூன்று கோவில்களில், நேற்று மயான கொள்ளை திருவிழா நடந்தது.
அதிகாலை, 3:00 மணிக்கு, முகவெட்டு எடுத்து தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், எலுமிச்சை பழங்களை உடலில் குத்திக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர். முதுகில் அலகு குத்தியபடி உரல், தேர், சங்கிலி ஆகியவற்றை மயானத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிறுவர், சிறுமியர், காளி, அம்மன், ஈஸ்வரன் போன்ற வேடங்களை அணிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். மதியம், 3:30 மணிக்கு, தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில் மற்றும் சண்முகசெட்டி தெரு பூங்காவனத்ம்மன் கோவில்களில் இருந்து, அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளைக்கு புறப்பட்டார்.
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர்கள், தென்பெண்ணை ஆற்றின் கரையிலுள்ள அண்ணாதுரை சிலை அருகில், 5:40 மணிக்கு வந்தடைந்தன. அங்கு பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி பறந்து சென்று, சுவாமிக்கு மாலை அணிவித்து, கற்பூரம் காட்டி, குழந்தையை துாக்கிக் கொண்டு ஆசி பெற்று வேண்டுதல் நிறைவேற்றனர். பின்னர், தேர்கள் தென்பெண்ணை ஆற்றில் நிறுத்தப்பட்டன. அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில், தற்போது புனரமைப்பு பணி நடப்பதால், இந்தாண்டு அம்மன் மயான கொள்ளைக்கு செல்லவில்லை. விழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
அரசு பஸ் குறிப்பேடு இனி தமிழில் மட்டுமே! தினமலர் செய்தி எதிரொலி
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்