பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 4 ம் தேதி முதல் 10ம் தேதி வரை, தேசிய பாதுகாப்பு வாரம் பின்பற்றப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் இது குறித்து விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பூர், காங்கயம் ரோடு அரசு போக்குவரத்து கிளை ஊழியர்களுக்கு முதலுதவி வழங்குவது குறித்து பயிற்சியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ரமேஷ் முகாமில் கலந்து கொண்ட அரசு பஸ் ஊழியர்களுக்கு இப்பயிற்சியை அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!
-
ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்
-
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
-
இறந்த தந்தை உடலை வணங்கி பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
-
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்
Advertisement
Advertisement