இரு சிறுமியருக்கு 'தொல்லை' 61 வயது டெய்லர் கைது

மதுரை : மதுரையில் இரு சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது டெய்லர் அப்துல்மஜீத்கான் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத்கான். இப்பகுதியில் டெய்லராக உள்ளார்.

இவரது நண்பரான சக டெய்லர் வீட்டிற்கு அடிக்கடி செல்வார். இருநாட்களுக்கு முன் அப்துல்மஜீத்கான் சென்றபோது நண்பரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பூங்காவிற்கு விளையாட அழைத்துச்சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

அதேபோல் அங்கு விளையாடிய மற்றொரு 10 வயது சிறுமிக்கும் தொந்தரவு கொடுத்தார்.

இதுகுறித்து வீடு திரும்பியதும் பெற்றோரிடம் சிறுமிகள் கூறினர்.

போலீசாருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து தெற்கு மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில் அப்துல்மஜீத்கானை கைது செய்தனர்.

Advertisement