மகாத்மா காந்தி நகரில் ரோடு, குடிநீர் திண்டாட்டம்
மதுரை: மதுரை பீபிகுளம் பகுதியில் ரோடு உட்பட அடிப்படை வசதிகள் சரியில்லாததால் பொதுமக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
பீபிகுளம் முதல் கிருஷ்ணாபுரம் காலனி, மகாத்மா காந்தி நகர், பாரதி நகர் பகுதிகளில் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
சீரற்ற ரோடால் வாகனங்களின் போக்குவரத்து சிரமமாக உள்ளது. இந்த ரோட்டில் வருமான வரித்துறை, சுங்கவரித்துறை, தபால் துறையின் மண்டல தலைமை அலுவலகம், உழவர் சந்தை, பள்ளிகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
மதுரையின் இரு அமைச்சர்களின் வீடு, தொகுதி இப்பகுதியைச் சேர்ந்ததாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளும் அதிகளவில் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
எனவே அவற்றின் சிரமத்தை உணர்ந்து ரோட்டை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு தவிர, குடிநீர் பிரச்னையும் இப்பகுதியில் அதிகம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் குடிநீர் வரவில்லை. அதேநிலைதான் பழைய திட்ட குழாய்களிலும் தண்ணீர் வரமறுக்கிறது என குடியிருப்போர் வேதனை தெரிவித்தனர்.
மேலும்
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!
-
இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு