கல்லூரி மாணவி மாயம்

செஞ்சி : செஞ்சியில் மாயமான கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செஞ்சி அடுத்த கட்டாஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகள் அபிநயா, 20; செஞ்சி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., படித்து வருகிறார். கடந்த 10ம் தேதி காலை கல்லூரியில் தேர்வு எழுத சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement