16 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்

ஈரோடு,முதலாவது வார்டு லட்சுமிபுரத்தை சேர்ந்த, 16 வயது சிறுவனுக்கு, ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அப்பகுதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். அப்போது ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு உறுதியானது.


இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டார். லட்சுமிபுரம் பகுதியில் துாய்மைப்பணி முடுக்கி விடப்பட்டது.

Advertisement