ரயிலில் சிறுமிக்கு தொல்லை

ஜோலார்பேட்டை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி தங்கள், 9 வயது மகளுடன், ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள கோவிலுக்கு இரு நாட்களுக்கு முன் சென்றனர். தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் இரவு, காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பினர்.
நள்ளிரவில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரயிலில் துாங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பலமனேரியை சேர்ந்த குமார், 30, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். குமாரை, பயணியர் உதைத்து, டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், குமாரை போக்சோவில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?
Advertisement
Advertisement