ஜல்லி பெயர்ந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், வெங்காடு ஊராட்சி உள்ளது. இப்பகுதியினர், வெங்காடு பிரதான சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர்.
பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவின் ஒரு பகுதியாக உள்ள வெங்காடு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
வெங்காடு பகுதிகளில் உள்ள தொழிற்சாலை, மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், வெங்காடு சாலை வழியே சென்று வருகின்றன.
கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலை, ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறியுள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஜல்லி கற்களில் மீது செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி இடறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ள வெங்காடு சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் வெங்காடு பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!