16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணிநாடுனர் பங்கேற்று பயன்பெற அழைப்பு


நாமக்கல் 'வரும், 16ல் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதில், பணிநாடுனர்கள் பங்கெற்று பயன்பெறலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்' நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், மாதம்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது.

அதன்படி, இந்த மாத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 16 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம். முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வி தகுதி உள்ளோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். விபரங்களுக்கு, 04286--222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement