திட்டப் பணிகள் துவக்கி வைப்பு

மதுரை : மதுரையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுப்பிரமணியபுரம் தெற்கு சண்முகாபுரம் சகாயமாதா பள்ளி அருகே ரூ.5 லட்சம் செலவில் அமைத்த ஆழ்துளை கிணறு, சுண்ணாம்பு காளவாசல் அருகே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து, கவுன்சிலர் ராஜபிரதாபன் பங்கேற்றனர்.

Advertisement