தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் பாராட்டு; குறைதீர் கூட்டத்தில் பெருமிதம்
மேலுார் : 'அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தினமலர் நாளிதழ் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. இதில் செய்தி வெளியானதும் மறுப்பு தெரிவிக்க முடியாத அதிகாரிகள் அவற்றை உடனே நிறைவேற்றுகின்றனர் ' என்று மேலுார் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் மேலும் பேசியதாவது: புதுசுக்காம்பட்டி பாண்டி சிறுமேளம் கண்மாயில் 22 ஏக்கரில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
பெரிய அருவி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்னை விவசாயத்தைக் காப்பதற்கு வெள்ளை ஈக்களை ஒட்டுண்ணி அல்லது மஞ்சள் அட்டை வழங்க வேண்டும்.
காவிரி திட்ட தண்ணீரை தனியார் உணவகத்தினர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். பெருமாள் குளத்தை துார்வாராமல் நிலமாக மாறி வருவதால் உடனே துார் வார வேண்டும்.
நாவினிபட்டி தெருவிளக்கு மின்ஒயரால் உயிர் பலி ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்றனர். இவை தவிர, மேலவளவில் கண்மாய் தண்ணீர் வீணாவது. கீரனுார் விவசாயிகளுக்கு பன்றிகள் தொல்லை, சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயில் மராமத்துப்பணி, இ. மலம்பட்டி சிறுவன கண்மாயில் துார்வாருதல், கள்ளம்பட்டி கண்மாயில் உடைந்த மடையை சரி செய்வது குறித்து எடுத்துக் கூறினர். விவசாயிகள் மணி, கிருஷ்ணன், சிதம்பரம், கதிரேசன்,, சாகுல் ஹமீது உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை