ஆன்மிக சிந்தனையுடன் மக்கள் வாழ வேண்டும்!

திருப்பூர் : மக்கள் அனைவரும் ஆன்மிக சிந்தனையுடன் வாழ வேண்டுமென, மகாலட்சுமி சுவாமி அருளாசி வழங்கினார்.

திருப்பூர் அருகேயுள்ள ஸ்ரீமகாலட்சுமி கோவிலில், 34ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், மகாலட்சுமி சுவாமிகள் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், மகாலட்சுமிக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பொங்கலுார் பிரபஞ்சானந்தா சுவாமிகள், பல்லடம் மூர்த்தி லிங்கேஸ்வர சுவாமி, கோவை பிரம்மரிஷி சுவாமிகள், எம்.எல்.ஏ., செல்வராஜ், வத்தலகுண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்ற வழிபட்டனர்.

உலகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது; பல்வகை துன்பங்கள் சூழ்கின்றன. அவற்றில் இருந்து விடுபட, மக்கள் அனைவரும் ஆன்மிக சிந்தனையுடன் வாழ வேண்டும்.

இறைவழிபாடு, ஆன்மீக சொற்பொழிவுகள் அதிகம் நடத்தப்பட வேண்டுமென, மகாலட்சுமி சுவாமி அருளாசி வழங்கினார்.

Advertisement