கிணற்றில் விழுந்த மூதாட்டி சாவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நொனங்கனுாரை சேர்ந்தவர் ராமாயி, 90. கண் பார்வை குறைபாடு உள்ளவர். மகன் தங்கராஜ் பராமரிப்பில் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிய-ளவில் இயற்கை உபாதை கழிக்க, வீட்டிலிருந்து அருகாமையி-லுள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது நிலை தடு-மாறி, அப்பகுதியிலுள்ள ஜெயராமன் என்பவரின் கிணற்றில் விழுந்தார். தகவலின் படி வந்த, பாப்பிரெட்டிப்பட்டி தீய-ணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த மூதாட்டி ராமாயியை சடலமாக மீட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.

Advertisement