பரவலாக பெய்த மழை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று பரவலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணி முதல், அரூர், தர்மபுரி, கம்பைநல்லுார் உள்ளிட்ட மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலை-களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளித்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement