கூடைப்பந்து வீரர்கள் தேர்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அணித்தேர்வு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், 2007 ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, ஆண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 86 வீரர்கள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2007ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, பெண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நேற்று மாலை நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 31 வீராங்கனைகள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement