தேசியக்கொடி ஊர்வலம்

பாகிஸ்தானுடனான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் ஈடுபட்ட நம் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ., சார்பில் கொடுவாயில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் வினோத் வெங்கடேஷ் கொடி அணி வகுப்பை துவக்கி வைத்தார்.

மண்டல தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மண்டல தலைவர் சந்திரசேகர், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மகுடபதி, மண்டல பொதுச் செயலாளர் பொன்னுசாமி, ஈஸ்வரமூர்த்தி, மண்டல துணைத் தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement