ரோட்டில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் நோய் தொற்று

சேதமான தண்ணீர் தொட்டி

திண்டுக்கல் பாறைப்பட்டியில் தண்ணீர் தொட்டி சேதமாகி தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர் .தொட்டியை சுற்றி புதர் மண்டி உள்ளது. போர்வெல்லை சரி செய்து தொட்டியை புதிதாக அமைக்க வேண்டும்.முருகேசன், பாறைப்பட்டி.

.................---------சிதைந்த மின் கம்பம்

வடமதுரை சிக்குபோலகவுண்டன்பட்டியில் இருந்து கொசவபட்டி செல்லும் ரோட்டில் சிதைந்து போன மின்கம்பத்தை மாற்றி அமைக்க புதிய கம்பம் நட்டு பல வாரங்களாகியும் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. செந்தில், வடமதுரை.

..........---------சேதமான பெயர் பலகை

திண்டுக்கல் நாகல் நகர் அண்ணாமலையார் பள்ளி ரோட்டில் உள்ள பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பாதை தெரியாமல் சிலர் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னதம்பி, நாகல்நகர்.

........----------நீதிமன்ற வளாகத்தில் புதர்

திண்டுக்கல் நீதிமன்ற வளாக கட்டடத்திற்குள் செடிகள் வளர்ந்துள்ளதால் கட்டடங்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது .இதனால் இப்பகுதியை சுத்தப்படுத்தி செடகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.ஜெயராமன், திண்டுக்கல்.

..............----------குப்பையால் பாதிப்பு

பழநி பழனியாண்டவர் நகர் ரோட்டில் பல நாட்களாக குப்பை அள்ளாமல் குளித்துள்ளது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பும் ஏற்படுகிறது .குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா, பழநி.

.................-----------

சிரமத்தில் மாணவர்கள்

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. கரடுமுறடான இப்பாதையை கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரன், திண்டுக்கல்.

....-----------ரோட்டில் கோழிக்கழிவு

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரகேடும் ஏற்படுகிறது .பல நாட்களாக அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் நோய் தொற்றும் உருவாகிறது . இதற்கு வழி காண வேண்டும். முரளி, திண்டுக்கல்.

..........----------

Advertisement