மாவட்டத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

தேனி, ஜூன் 2- மாவட்டத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் ஒரு மாதத்திற்கு மேலாக கிலோ ரூபாய் 20க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது.
மாவட்டத்தில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சுமார் 9 ஆயிரம் எக்டேரில் சாகுபடி ஆகிறது. கண்டமனுார், வருஷநாடு, போடி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி ஆகிறது.
தேவாரம், தேனியில் உள்ள மொத்த மார்க்கெட்டுகள் மூலம் உள்ளூர், வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேனி உழவர் சந்தையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி கிலோ ரூ.20க்கும் குறைவாக விற்பனையாகிறது. மே மாத துவக்கத்தில் தரத்தினை பொறுத்து, கிலோ ரூ15 முதல் ரூ.18 வரை விற்பனையானது. நேற்று கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்பனையானது. தக்காளி மொத்த விற்பனை மையங்களில் 15 கிலோ பெட்டி ரூ.100க்கு விற்பனையாகிறது.
அதே நேரம் மழை காரணமாக தேங்காய், வெங்காயம், முருங்கை, பீன்ஸ், கொத்தமல்லி, அவரைக்காய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது.
உழவர் சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நல்ல சீதோஷ்ண நிலை நிலவுவதால் உள்ளூர் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அதே நேரம் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் விலை சரிந்துள்ளது. ஒரு மாதத்திற்கு விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவுதான். ஆடி மாதம் துவங்கிய பின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.'', என்றனர்.
மேலும்
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!