அலைபேசி திருடர்கள் கைது

மதுரை: சிவகாசி துாய்மை பணியாளர் ஆறுமுகம் 39. ராமேஸ்வரம் செல்வதற்காக பொதிகை ரயிலில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மதுரை வந்தார்.

பொதுப் பெட்டியில் இருந்து இறங்கிய போது கூட்ட நெரிசலில் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி திருடு போனதை அறிந்து புகார் அளித்தார். சி.சி.டி.வி., உதவியுடன் விருதுநகர் மாவட்டம் ஆனைகுட்டம் குருசாமி 41, தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளிமுத்து 32, ஆகிய இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து அலைபேசியை பறிமுதல் செய்தனர்.

Advertisement