அங்கன்வாடி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

காஞ்சிபுரம்:தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தேவரியம்பாக்கம் மற்றும் தோணாங்குளம் கிராமங்களைச் சேர்ந்த அங்கன்வாடி மையங்களில், முன் பருவ கல்வி நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது.
இந்த விழாவிற்கு, தேவரியம்பாக்கம் அங்கன்வாடி மையப் பொறுப்பாளர் சரஸ்வதி தலைமை வகித்தார்.
தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முன் பருவ கல்வி முடித்த குழந்தைகளுக்கு பட்டமளித்து கவுரவித்தார்.
இதில், தோணாங்குளம் அங்கன்வாடி மையப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குழந்தைகளின் பெற்றோர், தனியார் பள்ளி மாணவர்களை போல பட்டமளிப்பு உடையை அணிவித்து அசத்தி இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
Advertisement
Advertisement