பள்ளி சுவர் இடிவதால் அச்சம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி ஜீவா நகரில் செயல்படுகிறது. பள்ளியானது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதிரி பள்ளியாக செயல்படுகிறது.
இங்கு மாணவர்கள் படிக்கும் சூழலில் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் அருகில் உள்ள விடுதியை ஒட்டியுள்ள சுவர்கள் இடிந்தன.
தற்போது நயினார்கோவில் ரோட்டை ஒட்டிய பகுதியில் ஆங்காங்கே சுவர் இடிகின்றது. தொடர்ந்து இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் புகலிடமாக மாறுகிறது.
தற்போது பள்ளி துவங்கிய நிலையில் மாணவர்கள் விளையாட்டுப் போக்கில் சுவர் இல்லாத பகுதிகளில் கடந்து செல்கின்றனர்.
மேலும் நாய் மற்றும் கால்நடைகள் மைதானங்களில் புகுவதால் ஆபத்தான சூழல் உள்ளது. இதனால் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது.
ஆகவே மாதிரி பள்ளியாக உள்ள இங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
தொடர்ந்து மாணவர்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சுற்றுச்சுவரை சீர் செய்ய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்