கைரேகை, ஹெல்மெட் இல்லாமல் டூ-வீலரை ஸ்டார்ட் செய்ய முடியாது உடுமலை மாணவர்கள் கருவி தயாரிப்பு

உடுமலை:இருசக்கர வாகன விபத்துகளை தடுக்கும் புதிய கருவியை, உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக் -- மோட்டார் வெகிக்கிள் தொழிற்பிரிவு இரண்டாமாண்டை சேர்ந்த பேச்சிமுத்து, கதிரேசன் ஆகிய இரு மாணவர்கள், இருசக்கர வாகனங்களின் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், புதிய கருவியை, 'நெக்ஸ் - ஜென் வெகிக்கிள் டிவைஸ்' என்ற பெயரில் வடிவமைத்துள்ளனர்.

கட்டாயம் ஸ்கேன்



இந்த கருவியை உருவாக்கியுள்ள மாணவர்கள் கூறியதாவது:

இந்த கருவியை இருசக்கர வாகனத்தில் பொருத்துவதால், வாகன உரிமையாளர்களின் கைரேகை மூலம் தான் வாகனத்தை இயக்க முடியும். ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் ஸ்கேன் செய்த பிறகே ஓட்ட முடியும். தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வாகனம் இயங்கும்.

மது அருந்தியிருந்தால் வாகனம் இயங்காது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பின் போது, இந்த வாகனத்தை நிறுத்தாமல் செல்ல இயலாது. வாகனத்தை யாராவது திருடிச் சென்றால், ஜி.பி.எஸ்., உதவியுடன் அதை தடுக்க முடியும்.

உதவி



பயிற்றுநர்கள் உமா சந்திரன், சேகர் ஆகியோர், இந்த கருவியை வடிவமைக்க வழிகாட்டினர். மேலும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நதி சந்திரன், பயிற்சி அலுவலர் ரமேஷ் எங்களை ஊக்குவித்து, கருவி வடிவமைப்பதற்கான உதவிகளை வழங்கினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement