பலாத்காரம் செய்யும் முயற்சியில் மூதாட்டியை கொன்றவர் கைது
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, மதுபோதையில், 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று முடியாததால், கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா. இவர், அப்பகுதியிலுள்ள மாந்தோப்பில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆற்காடு டவுன் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், கத்தியவாடியை சேர்ந்த நந்தகுமார், 19, என்பவர், மதுபோதையில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, மூதாட்டி கூச்சலிட்டதால், அவரை இழுத்துச் சென்றதில், அதிக ரத்தம் வெளியேறி, மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, நந்தகுமார் தப்பிச் சென்றதும் தெரிந்தது. ஆற்காடு டவுன் போலீசார், நந்தகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
Advertisement
Advertisement