தஞ்சை கோவில் இடம் மீட்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூர், பூக்காரத்தெருவில், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான ௩,௧௭௦ சதுர அடி இடத்தை 27ஆண்டாக ஆக்கிரமைக்கப்பட்டு இருந்தது. இடம் இடத்தில், ரேவதி என்பவர் 1,570 சதுர அடி இடத்தையும், பழனிவேல் என்பவர் 1,600 சதுர அடி இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தனர்.

இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடத்தை மீட்பதற்காக இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது; ஆனால், காலி செய்யவில்லை. இதையடுத்து, கடந்த 1998ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

விசாரணைக்குப் பின், கடந்த ஏப்., 30ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், வீடுகள் இடிக்கப்பட்டு, அந்த இடம் கோவில் செயல் அலுவலர் அய்யம்மாள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement