மலேசிய பயணிகள் மீது வனத்துறை தாக்குதல்

கொடைக்கானல்:கொடைக்கானல் வந்த மலேசிய சுற்றுலா பயணிகளை நுழைவு கட்டண வசூலில் ஏற்பட்ட சர்ச்சையால் வனத்துறை தாக்கியது .
மலேசியா கோலாலம்பூரை சேர்ந்தவர் குமார். குடும்பத்தினருடன் நேற்று கொடைக்கானல் வந்தார். குணா குகை செல்ல நுழைவு கட்டணமாக 6 பேருக்கு ரூ. 60 செலுத்தினார். சூழல் சுற்றுலா காவலர், நீங்கள் வெளிநாட்டினாரா என கேட்க மலேசியா என கூறி உள்ளனர். வெளிநாட்டினருக்கு ரூ. நுாறு கட்டணம் என அவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறான அறிவிப்பு எதுவும் இங்கு இல்லையே என குமார் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுடன் வந்த பயணி தனிஷ் இதை வீடியோ எடுத்தார். இதில் ஆவேசமடைந்த வனவர் மாசாணமுத்து அலைபேசியை பறித்து தனீஷை தாக்கினார்.
இதை தொடர்ந்து வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்தார். சுற்றுலா காவலர் பாலாஜி தனது கைவிரலை மலேசிய பயணிகள் கடித்ததாக போலீசில் புகார் அளித்தார். இருதரப்பிலும் புகார் பெற்ற கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
குணா குகை, மோயர் சதுக்கம், பில்லர் ராக், பைன் பாராஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் பயணிகளிடம் வனத்துறையினர் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. ஏற்கனவே கொடைக்கானலில் சுற்றுலா நலிவடையும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு சீசனில் மழையால் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இந்நிலையில் இது போன்ற செயல்களால் அது மேலும் பாதிக்கப்படும். எனவே அரசு இவ்விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து ஒழுங்கீனமாக நடக்கும் வனத்துறையினரை களையெடுக்க வேண்டும்.
மேலும்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்