நிலம் வழங்கிய விவசாயிகள் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நகரில் இருந்து கனகம்மாசத்திரம், திருத்தணி, பொன்பாடி வரை உள்ள இரு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலை சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக, விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டன.
அந்த வகையில், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராம விவசாயிகள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று, ஆறு வழிச்சாலை பணிக்காக வழங்கிய நிலத்திற்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை விரிவாக்கம் நடக்கும் இடத்தில் பணிகளை தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஒப்பந்தாரர் தரப்பில், 'உங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்' என, சமரசம் செய்தனர். பின், சாலை விரிவாக்கம் பணிகள் மீண்டும் துவங்கியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
Advertisement
Advertisement