கம்பத்தில் மல்டி பிளக்ஸ் சினிமா தியேட்டர்: கலெக்டர் திறந்தார்

1

கம்பம்: கம்பம் ஆர்.ஜே.எம்.எஸ். குழுமத்தின் சார்பில் தி டேன் யூப் என்னும் நவீன மல்டி பிளக்ஸ் சினிமா தியேட்டரை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்.

கம்பம் - குமுளி பைபாஸ் ரோட்டில் அதி நவீன மல்டி பிளக்ஸ் சினிமா தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.

தரை தளத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், முதல் தளத்தில் இரண்டு தியேட்டர்கள் உள்ளன. இதில் தலா 168 இருக்கைகள் கொண்டது. தியேட்டர்களின் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.

விழாவிற்கு ஆர்.ஜே.எம்.எஸ். குழுமத்தின் தலைவர் கே.ஆர்.சௌந்தரராசன் தலைமை வகித்தார். ராம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் கவிதா முன்னிலை வகித்தார்.

தென் பிராந்திய கடற்படை இணை ஆணையர் ( தணிக்கை ) கே.ஆர்.எஸ்.ராம் ஜெயந்த் வரவேற்றார்.

கலெக்டர் ரஞ்ஜீத் சிங், ரிப்பன் வெட்டி புதிய சினிமா தியேட்டர்களை திறந்து வைத்தார். அனைத்து நவீன வசதிகளை கொண்டுள்ளது. திறப்பு விழாவில் உத்தமபாளையம் ஆர். டி.ஒ. செய்யது முகமது, தாசில்தார் கண்ணன், புதுப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் சிவாஜி மோகன், தொழிலதிபர் முத்தையா, தர்மர், கூட்டுறவு சங்க செயலர் தேவராஜ், அரசு ஒப்பந்த காரர்கள் எல்.ராஜேந்திரன், எல்.ரவி, விவசாய சங்க செயலர் சுகுமாறன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ஆர்.ஜெயப் பாண்டியன் ஒருங்கிணைத்தார்.

Advertisement