கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்: பத்திரிகையாளர் குமுறல்!

5


ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் தனது துயரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


கனாவில் உள்ள வான்கூவரில் காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர்கள் குழு நடத்திய பேரணிக்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது, ​கனடா பத்திரிக்கையாளர் மோச்சா பெசிர்கன் தாக்கப்பட்டு உள்ளார். இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பேரணிக்கு செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தாக்குதல் நடத்தினர்.​

இது 2 மணி நேரத்திற்கு முன்பு நடந்தது, நான் இன்னும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். குண்டர்களைப் போல செயல்பட்ட பல காலிஸ்தானியர்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர், என்னை மிரட்டினர். என்னை அச்சுறுத்தும் வகையில் பேசினர். என் கையிலிருந்து என் தொலைபேசியைப் பிடுங்கிக் கொண்டனர்.



நான் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் காலிஸ்தானியர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு சென்று செய்தி சேகரித்து வருகிறேன். எனது ஒரே குறிக்கோள் சுதந்திரமான முறையில் பத்திரிகையில் செய்தி வெளியிடுவதும், என்ன நடக்கிறது என்பதைப் எடுத்துரைப்பதும் ஆகும்.


நான் சுதந்திரமாக செயல்படுவதால், இது சிலரை விரக்தியடையச் செய்கிறது. காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் மிரட்டினாலும் எனது பணியை கைவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement