சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம்; அதிர்ஷ்டசாலி என இந்திய வீரர் சுக்லா நெகிழ்ச்சி!

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக நாளை (ஜூன் 10) இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு, வரும் 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று, நாசா அறிவித்துள்ளது. சுபன்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது முதல் பயணத்திற்கான இறுதிக் கட்டத்தில் தயாராகி வருகிறார். இன்று (ஜூன் 09) சுபன்ஷூ சுக்லா குழுவினர் ஒத்திகை நடத்தினர்.
41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இதற்கு முன், 1984ல் ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார்.
மிகவும் அதிர்ஷ்டசாலி!
இது குறித்து இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா கூறியதாவது: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது மிகவும் அற்புதமான பயணம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




மேலும்
-
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!
-
குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் குளறுபடி; ரசிகருக்கு இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு
-
வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்
-
தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி
-
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது