பூக்குழி திருவிழா

நரிக்குடி : நரிக்குடி பனையூரில் சாது காமாட்சி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 6ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு பால்குடம், அபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது.

சாது காமாட்சி அம்மன் உற்சவ சிலையுடன் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

Advertisement