மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருபுவனை; திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
திருபுவனை அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றனர்.
அவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் கிளாடின் கிரேஸ்மாக்பார்லின் தலைமை தாங்கினார்.
பொறுப்பாசிரியர் பக்தவச்சலம் வரவேற்றார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி தமிழ்ச்செல்வி, இரண்டாம் இடம் பிடித்த சுபிக் ஷா மூன்றாம் இடம் பிடித்த நபிலட்சுமி ஆகியோருக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் உத்திராம்பாள், சுரேஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
பிரசாத் நன்றி கூறினார்.
மேலும்
-
ஆமதாபாத் விமான விபத்து: மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராகுல் இரங்கல்
-
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- 5 மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
-
விமானத்தில் பயணித்தவர்கள் யார்!